மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மாநில மனித உரிமை ஆணையக் குழுவினர் ஆய்வு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையக் குழுவினர் சனிக்கிழமை பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

News image
Updated On :2 ஜூன் 2018, 1:55 pm

DIN


தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையக் குழுவினர் சனிக்கிழமை பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனா். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் வலியுறுத்தினர். 

இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயசந்திரன், மனித உரிமை ஆணைய காவல் கண்காணிப்பாளர் சத்தியபிரியா, மனித உரிமை ஆணைய உதவிப் பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் கொண்ட குழுவினர், தூத்துக்குடியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 

கலவரம் நிகழ்ந்த இடங்கள், கலவரத்தின்போது சேதப்படுத்தப்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தீ வைத்து எரிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கூடம், காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பு, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களின் வீடுகள், திரேஸ்புரம் பகுதி ஆகியவற்றை அவா்கள் பார்வையிட்டு அங்கிருந்த மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா மற்றும் அதிகாரிகளுடன் மாநில மனித உரிமை ஆணையக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.