வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

துப்பாக்கிச் சூடு சம்பவம்: முன்னாள் ஆட்சியர், டிஐஜியிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் மதுரை சரக டிஐஜி பிரதீப்குமார் ஆகியோரிடம் தேசிய

News image
Updated On :5 ஜூன் 2018, 7:33 pm

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் மதுரை சரக டிஐஜி பிரதீப்குமார் ஆகியோரிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பிரபு தத்தா பிரசாத் மதுரை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு தொடர்பாக மதுரை விமான நிலையத்தின் மேல் தளத்தில் உள்ள அலுவலக அறை ஒன்றில் தூத்துக்குடியின் முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பிரபு தத்தா பிரசாத் விசாரணை நடத்தினார். செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இதேபோல தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் மே 23ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரை சரக டிஐஜி பிரதீப்குமாரிடமும் விசாரணை நடைபெற்றது. அவரிடம் துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.