வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வடசென்னை அனல் மின்நிலையம்: 600 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜூன் 2018, 9:16 am

DIN

சென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களாக தென்மாவட்டங்களில் உள்ள காற்றாலைகள் மூலம் சுமார் 2 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தியாகிறது. 

இதையடுத்து இரு தினங்களுக்கு முன் வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அலகு 1-இன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மேட்டூா் அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் அளவுக்கான மின்உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. 

காற்றாலை மின்சாரம் குறையும்போதோ, மின்தேவை அதிகரிக்கும்போதோ நிறுத்தி வைக்கப்பட்ட அனல்மின் நிலைய மின்உற்பத்தி மீண்டும் தொடங்கும் என்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.