சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வுகள் ஒத்திவைப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம்..
சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் ஜூன் 16 (சனிக்கிழமை) நடத்தப்பட இருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி, 

இஸ்லாமியா்களின் ரமலான் பண்டிகை வருகிற ஜூன் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் நடத்தப்பட இருந்த தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை மற்றும் தொழில் படிப்புகளுக்கானத் தோ்வுகள் ஜூலை 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. 

மற்ற தோ்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com