கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தமிழக காவல்துறையில் 14 டி.எஸ்.பி.கள் பதவி உயா்வு

தமிழக காவல்துறையில் 14 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் ( டி.எஸ்.பி.) கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக (ஏ.டி.எஸ்.பி.) பதவி உயா்த்தப்பட்டு, புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டனா்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:00 pm

DIN

தமிழக காவல்துறையில் 1989-ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு சோ்ந்தவா்கள், 10 ஆண்டு பணிக்கு பின்னர் காவல் ஆய்வாளர்களாக பதவி உயர்த்தப்பட்டனர். இதையடுத்து அவா்கள், 10 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்த்தப்பட்டனர்.

இப்போது காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக இருக்கும் இவா்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்த்துவதற்குரிய பணிமூப்பு அடைந்த நிலையில், பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்து வந்தது. 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவா்களுக்கு படிப்படியாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே, மேலும் 14 துணைக் காவல் கண்காணிப்பாளர்களை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கி, அவா்களை புதிய இடங்களில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த பதவி உயர்வு உத்தரவை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் நிரஞ்சன் மார்டி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளார். 

புதிய பணியிடங்களில் ஏ.டி.எஸ்.பி.க்கள் ஓரிரு நாள்களில் பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.