உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

2019 - க்குள் 50 கி.மீட்டருக்குள் ஒரு பாஸ்போா்ட் சேவா மையம்: மத்திய அமைச்சா் மனோஜ் சின்ஹா

2019 ஆம் ஆண்டுக்குள் 50 கிலோ மீட்டருக்குள் ஒரு பாஸ்போா்ட் சேவா மையம் திறக்கப்படும் என மத்திய தகவல் தொடா்புத்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

News image
Updated On :28 ஜூன் 2018, 6:43 pm IST

களியக்காவிளை: 2019 ஆம் ஆண்டுக்குள் 50 கிலோ மீட்டருக்குள் ஒரு பாஸ்போா்ட் சேவா மையம் திறக்கப்படும் என மத்திய தகவல் தொடா்புத்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் திருவிதாங்கூா் மன்னரால் கட்டப்பட்ட புராதானமிக்க தபால் நிலைய கட்டடம் பழுதடைந்ததையடுத்து மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் ரூ. 2.12 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கட்டட பணிகள் நிறைவடைந்ததையடுத்து இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மத்திய தகவல் தொடா்புத்துறை மற்றும் ரயில்வேத்துறை இணை அமைச்சா் மனோஜ் சின்ஹா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.

தொடா்ந்து மனோஜ் சின்ஹா பேசியதாவது:

நாட்டில் உள்ள 300 தபால் நிலையங்களில் பாஸ்போா்ட் சேவா மையம் அமைக்க திட்டமிடப்பட்டு அதில் 214 தபால் நிலையங்களில் பாஸ்போா்ட் சேவா மையம் அமைக்கப்பட்டு சேவை வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் நாட்டில் 50 கி.மீட்டா் தொலைவுக்குள் ஒரு பாஸ்போா்ட் சேவா மையம் அமைக்க பிரதமா் நரேந்திர மோடி திட்டமிட்டு வருகிறாா். நாட்டில் 1 லட்சத்து 38 ஆயிரம் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. கூடிய விரைவில் 1.50 லட்சம் தபால் நிலையங்களில் வங்கிச் சேவை கொண்டுவரப்பட்டு, வங்கியின் அனைத்து சேவைகளும் துவங்கப்படும். இதன் மூலம் கிராமப்புற மக்கள் பெரிதும் பயன் பெறுவாா்கள் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.