இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

சத்தி வனக் காப்பகத்தில் மே மாதம் முழுவதும் வனச் சுற்றுலா

கோடை விடுமுறையையொட்டி குழந்தைகளுடன் இயற்கையை ரசிக்க மே மாதம் முழுவதும் 'வண்ணப் பூரணி வனச் சுற்றுலா' திறந்துவிடப்படும் என சத்தியமங்கலம் புலிகள்

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

கோடை விடுமுறையையொட்டி குழந்தைகளுடன் இயற்கையை ரசிக்க மே மாதம் முழுவதும் 'வண்ணப் பூரணி வனச் சுற்றுலா' திறந்துவிடப்படும் என சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர்அருண்லால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் புதன்கிழமை கூறியதாவது:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வாரத்தில் சனி, ஞாயிறு மட்டுமே திறக்கப்பட்ட 'வண்ணப் பூரணி வனச் சுற்றுலா', இந்த மாதம் முழுவதும் அனைத்து நாள்களிலும் திறக்கப்படும். காலை 7 மணிக்கு முதல் பயணமாகவும் மாலை 2.30 மணிக்கு பிற்பகல் பயணமாகவும் துவங்கும். சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரிய தின்பண்டங்கள் வழங்கப்படும். வனப் பகுதியில் 20 கி.மீ. வேகத்தில் வனத்தைக் கண்டு ரசிக்கலாம். திம்பம் முதல் கோட்டாடை, சுல்தான் சாலை வரையிலும், காராட்சிக்கொரையில் இருந்து தெங்குமரஹாடா வரையிலும், ஆசனூரில் இருந்து ஹூலிகரேப்பட்ட வரையிலும், கேர்மாளத்தில் இருந்து சூட்டிங் லாட்ஜ் வரையிலும், சிக்ஹள்ளியில் இருந்து ஜூரஹள்ளி வரையிலும் என 6 பகுதிகளில் வனச் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதிகளுக்குச் செல்ல விரும்புவோர் 97506-59436 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், str-tn.org என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.