ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மே 19-இல் ஆலோசனைக் கூட்டம்: கமல் அறிவிப்பு

காவிரி விவகாரம் தொடர்பாக மே 19-இல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Updated On :14 மே 2018, 8:04 pm

காவிரி விவகாரம் தொடர்பாக மே 19-இல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது:
காவிரி விவகாரம் தொடர்பாக மே 19-ஆம் தேதி மண்ணடியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமை வகிக்க உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அரசு அளித்துள்ள வரைவுத் திட்டம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம். இந்தக் கூட்டத்தில் கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் பங்கேற்க வேண்டும். அதிமுகவினர் கூட பங்கேற்கலாம். தமிழகம் அனைத்து உரிமைகளையும் இழந்து வருகிறது. அதை மீட்டெடுக்க வேண்டியது அனைவரின் கடமை.
மக்களைச் சந்திக்கிறோம்: "காவிரிக்காக தமிழகத்தின் குரல்' என்ற தலைப்பில் மக்களைச் சந்திக்கவும் உள்ளோம். கர்நாடக முதல்வரைச் சந்தித்து முறையிடவும் தயாராக இருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ததோடு பிரச்னை முடிந்து விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. காவிரி நீரைப் பெறவும், போராட வேண்டியுள்ளது என்றார்.
அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் உள்பட பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.