புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? கமல் கேள்வி 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி கொடுத்தது யார் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :22 மே 2018, 12:44 pm

DIN

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி கொடுத்தது யார் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது செவ்வாயன்று நூறாவது நாளை எட்டியது. இன்று காலையில் இருந்தே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டகாரர்கள் பெருமளவில் குவிந்தனர். தடைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால், காவலதுறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பத்து பேர் மரணமடைந்தனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி கொடுத்தது யார் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் செவ்வாய் மாலை  செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

சட்டத்தை மதிக்காமல் தொடந்து தூத்துக்குடியை மாசுபடுத்தி வரும் வேலையில் ஸ்டெர்லைட் ஈடுபட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய போராட்டக்காரரகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது.

தூத்துக்குடி சம்பவத்தை தமிழகம் என்றைக்கும் மறக்காது.

இது போன்ற மக்கள் போராட்டங்களுக்கு ரத்தத்தினால் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று அரசு எண்ணக்  கூடாது.

ஸ்டெர்லைட் ஆலையினை மூட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி கொடுத்தது யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். மேலிடத்தில் அனுமதி தராமல் எப்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கும்?

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால் அரசும் அமைதி காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.