யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்  உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்களை மறு உத்தரவு வரும்வரை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. 

News image
Updated On :23 மே 2018, 1:27 pm

DIN

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்களை மறு உத்தரவு வரும்வரை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விசாரிக்க வேண்டி உத்தரவிட கோரி 3 வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர் . அந்த  மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் புதனன்று நடைபெற்றது.

மூன்று வழக்கறிஞர்களின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் சங்கரசுப்பு, "தூத்துக்குடி சம்பவம் தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பே போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகம் போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை" என்று தெரிவித்தார்.

அப்பொழுது நீதிபதிகள், "நீதிமன்றத்திற்கு வெளியே நடப்பது ஏதுவும் தெரியாமல் நாங்கள் இங்கே உட்காந்திருக்கிறோம் என நினைக்க வேண்டாம்,நாங்கள் இங்கு இருப்பதால் அனைவரையும் சட்டத்தின் பார்வையில்தான் பார்க்கிறோம்" என்று அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞருக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.