மதுரை: மதுரையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சல் பாதித்து 6 பேர் பலியானதாக அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் பாதித்து 12 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும்பட்சத்தில் அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.