கரூர் மாவட்டம் புன்னம் அருகே கல்குவாரி அதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 280 ஜெலட்டின் குச்சிகளையும், 700 மீ. திரிகளையும் போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
புன்னம்சத்திரத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (42). இவர் அதே பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார். இதனிடையே வீட்டில் ஜெலட்டின் குச்சிகளை பதுக்கி வைத்திருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீஸாருக்கு திங்கள்கிழமை காலை தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் தர்மலிங்கம் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு குவாரியில் பாறைகளை வெடிவைத்து தகர்க்கப் பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் 280 மற்றும் 700 மீ. திரி ஆகியன இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார் தர்மலிங்கம் மீது வீட்டில் வெடிப் பொருள்களை வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்? அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு
தாயாவதை உறுதி செய்தார் சமந்தா! மகப்பேறு விடுமுறை எடுப்பதாகப் பேச்சு!

வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்த பந்தன் வங்கி!

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


