கரூர் மாவட்டம் புன்னம் அருகே கல்குவாரி அதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 280 ஜெலட்டின் குச்சிகளையும், 700 மீ. திரிகளையும் போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
புன்னம்சத்திரத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (42). இவர் அதே பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார். இதனிடையே வீட்டில் ஜெலட்டின் குச்சிகளை பதுக்கி வைத்திருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீஸாருக்கு திங்கள்கிழமை காலை தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் தர்மலிங்கம் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு குவாரியில் பாறைகளை வெடிவைத்து தகர்க்கப் பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் 280 மற்றும் 700 மீ. திரி ஆகியன இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார் தர்மலிங்கம் மீது வீட்டில் வெடிப் பொருள்களை வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது

சுவாமி சிலையை சேதப்படுத்தியவா் கைது

பழையகுற்றாலம் அருவியில் தணியாத வெள்ளப்பெருக்கு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


