எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கல்குவாரி அதிபரின் வீட்டில் இருந்து 280 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

கரூர் மாவட்டம் புன்னம் அருகே கல்குவாரி அதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 280 ஜெலட்டின் குச்சிகளையும், 700 மீ. திரிகளையும் போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்

Updated On :6 நவம்பர் 2018, 1:15 am IST


கரூர் மாவட்டம் புன்னம் அருகே கல்குவாரி அதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 280 ஜெலட்டின் குச்சிகளையும், 700 மீ. திரிகளையும் போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
புன்னம்சத்திரத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (42). இவர் அதே பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார். இதனிடையே வீட்டில் ஜெலட்டின் குச்சிகளை பதுக்கி வைத்திருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீஸாருக்கு திங்கள்கிழமை காலை தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் தர்மலிங்கம் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு குவாரியில் பாறைகளை வெடிவைத்து தகர்க்கப் பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் 280 மற்றும் 700 மீ. திரி ஆகியன இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார் தர்மலிங்கம் மீது வீட்டில் வெடிப் பொருள்களை வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.