கிராமங்களுக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடைக்கானலைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு விவரம்:
கொடைக்கானலில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் யானைகள், மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்த யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறையின் காரணமாக யானைகள் ஊருக்குள் நுழைகின்றன. இதனைத் தடுக்க அரசு தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

12 ஆண்டு தூய்மை இந்தியா திட்டம்... அனைவருக்கும் தரமான சுகாதார சேவை! பிரதமர் மோடி

ஹரி இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா?

கூப்பர் கானலி முதல் சதம்..! ஆறுதல் வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


