கோவை: கோவையில் டெங்கு காய்ச்சலுக்குப் பெண் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் டெங்குவும், பன்றிக் காய்ச்சலும் மிக வேகமாகப் பரவி வருகின்றன. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு பன்றி, டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 11 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 58 பேரும் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்தவர் கவிதா(24). இவர் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசுப் பேருந்துகள் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

ஜனவரி - மாா்ச் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் ரூ. 1.06 லட்சம் கோடி!

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: டாக்ஸி ஓட்டுநா் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



