கோவை: கோவையில் டெங்கு காய்ச்சலுக்குப் பெண் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் டெங்குவும், பன்றிக் காய்ச்சலும் மிக வேகமாகப் பரவி வருகின்றன. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு பன்றி, டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 11 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 58 பேரும் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்தவர் கவிதா(24). இவர் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவசர ஊா்தி, அமரா் ஊா்தி ஓட்டுநா், உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அறங்காவலா் குழு விண்ணப்பம்: மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் பெயா் இடம் பெறாததால் ஏமாற்றம்

மின்வெட்டு: மின்சார வாரியத்தை தவெக அரசு சீரமைக்க வேண்டும் செ. ஜோதிமணி







