ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

தீபாவளிக்கு அனுமதி அளித்திருக்கும் அந்த நேரத்திலாவது பட்டாசு வெடிக்க முடியுமா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி காலை 7-8 மணிக்கும், மாலை 6-7 மணிக்கும் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

News image
Updated On :5 நவம்பர் 2018, 3:03 pm IST


சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி காலை 7-8 மணிக்கும், மாலை 6-7 மணிக்கும் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தென் மாநிலங்களுக்கு மட்டுமே இந்த அனுமதி நேரம் பொருந்தும்.

சரி இந்த சொற்ப நேரத்திலாவது நிம்மதியாக பட்டாசு வெடிக்க முடியுமா? முடியாது என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். நவம்பர் 6ம் தேதி தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழையும், 7 மற்றும் 8ம் தேதி தென் தமிகத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, நவம்பர் 6ம் தேதி தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யும். மணிக்கு 30 - 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். இந்தியப் பெருங்கடலும், வங்கக் கடலும் இணையும் பகுதியில் இருந்து மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். கடற்பரப்பு மோசமானது முதல் மிக மோசமானதாக இருக்கும் என்பதால், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் கரை திரும்பவும், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 7ம் தேதி தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நிலைதான் நவம்பர் 8ம் தேதியும் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தென் தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தீபாவளி நாளில், அனுமதியளிக்கப்பட்ட நேரத்தில் கூட பட்டாசு வெடிக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

எனினும், சென்னை உள்ளிட்ட வட தமிழக மக்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கருதலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.