சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

தீபாவளி பட்டாசு: உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும்: துணைமுதல்வர்

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் 

News image
Updated On :6 நவம்பர் 2018, 1:38 am IST


தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையிலிருந்து திங்கள்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, பொதுமக்கள் நீதிமன்ற அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தேவைப்படும் பாடங்களைத் தவிர மற்ற பாடங்களில் இருந்து கேள்விகள் தமிழில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. அதனால் இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றிபெறும். பருவமழை காலங்களில் பரவி வரும் காய்ச்சல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 
பருவமழை காரணமாக ஏற்படும் சேதங்களை தவிர்க்க அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.