பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த கொகைன் போதைப் பொருளை வீட்டில் வைத்து விற்பனை செய்த நைஜீரிய நாட்டு இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கொகைன் போதைப் பொருளை கடத்தி வந்து விற்பனை செய்வதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக போலீஸார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது எர்ணாவூர், ராமகிருஷ்ண நகரில் வீட்டில் வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவது போலீஸாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த இசுபா அகஸ்டீன் சிபுகி என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த பல லட்சம் மதிப்புள்ள கொகைன் போதைப் பொருளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு, சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞர் என்.பி குமார் ஆஜராகி வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.சந்திரன், குற்றஞ்சாட்டப்பட்ட நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!
மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற அச்சம்: பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


