ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ரூ. 25 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்: சூடான் நாட்டைச் சேர்ந்தவர் கைது

செல்லிடப்பேசியில் மறைத்து வைத்து ரூ. 25 லட்சம் மதிப்பிலான தங்கத்தைக் கடத்திய சூடான் நாட்டைச் சேர்ந்தவரை, கோவையில் வருவாய் புலனாய்வுப் பிரிவினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள்.

Updated On :6 நவம்பர் 2018, 1:16 am IST


செல்லிடப்பேசியில் மறைத்து வைத்து ரூ. 25 லட்சம் மதிப்பிலான தங்கத்தைக் கடத்திய சூடான் நாட்டைச் சேர்ந்தவரை, கோவையில் வருவாய் புலனாய்வுப் பிரிவினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை தனியார் விமானம் வந்தது. அதில் ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமானத்தில் இருந்து இறங்கிச் சென்ற பயணிகளின் உடைமைகளை வருவாய் புலனாய்வுப் பிரிவினர் சோதனையிட்டனர்.
அப்போது, சூடான் நாட்டைச் சேர்ந்த ஹபீஸ் அகமது இஸ்காக் மூசா (38) என்பவர் செல்லிடப்பேசியில் பேட்டரி இருக்கும் பகுதியிலும், இடுப்புப் பட்டையின் இரும்புப் பகுதியிலும் ரூ. 25 லட்சம் மதிப்பிலான 761 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வருவாய் புலனாய்வுப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து, தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அவர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.