ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

ஜெயலலிதா மரணம்: அப்பல்லோ மருத்துவர்கள் 8 பேருக்கு அழைப்பாணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் 8 பேருக்கு விசாரணை ஆணையம் திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பி உள்ளது. 

Updated On :9 அக்டோபர் 2018, 1:49 am IST


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் 8 பேருக்கு விசாரணை ஆணையம் திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பி உள்ளது. 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான தனிநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 
இந்த ஆணையத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
அழைப்பாணை: இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான விஜயசந்திர ரெட்டி, ராமகிருஷ்ணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமையும் (அக். 9), சத்தியமூர்த்தி, பாபு கே.ஆபிரகாம் ஆகியோர் புதன்கிழமையும் (அக். 10) ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. 
இதேபோன்று மருத்துவர்கள் மாத்யூ சாமுவேல், ரமேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் வியாழக்கிழமையும் (அக். 11), கார்த்திகேசன், ரேமண்ட் டோம்னிக் சேவியர் ஆகியோர் வெள்ளிக்கிழமையும் (அக். 12) ஆஜராகுமாறும் ஆணையம் திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.