முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் 8 பேருக்கு விசாரணை ஆணையம் திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான தனிநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஆணையத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
அழைப்பாணை: இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான விஜயசந்திர ரெட்டி, ராமகிருஷ்ணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமையும் (அக். 9), சத்தியமூர்த்தி, பாபு கே.ஆபிரகாம் ஆகியோர் புதன்கிழமையும் (அக். 10) ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இதேபோன்று மருத்துவர்கள் மாத்யூ சாமுவேல், ரமேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் வியாழக்கிழமையும் (அக். 11), கார்த்திகேசன், ரேமண்ட் டோம்னிக் சேவியர் ஆகியோர் வெள்ளிக்கிழமையும் (அக். 12) ஆஜராகுமாறும் ஆணையம் திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்நிய சக்திகளின் தூண்டுதலில் மத்திய அரசை சீா்குலைக்க ராகுல் சதி: பாஜக கடும் குற்றச்சாட்டு

திமுக - மமக இடையே கொள்கை உறவு: எம்.ஹெச். ஜவாஹிருல்லா
மின்வெட்டை சரிசெய்ய போா்க்கால நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி

இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


