கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் 

செவ்வாய் முதல் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 
கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் 
Updated on
1 min read

சென்னை: செவ்வாய் முதல் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

நிலத்தடி நீர் எடுப்பதில் விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய் முதல் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள்  வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். 

அதனை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு தலைமைச் செயலகத்தில் புதன் மாலை பொதுப்பணித்துறை செயலர், அதிகாரிகள், மெட்ரோ குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆகியோருடன், கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்   

அதன் முடிவில் கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளைபரிசீலிப்பதாக அரசுத்தரப்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியினை ஏற்று, போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com