பர்கூர் அருகே லாரி திருட்டு வழக்கில், தனியார் பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உள்பட மூவரை போலீஸார், ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள ஜெகதேவியைச் சேர்ந்தவர் சி.குமார் (39). லாரி உரிமையாளர். இவர், கடந்த 15-ஆம் தேதி தனது வீட்டின் அருகே லாரியை நிறுத்தியுள்ளார். மறுநாள் காலையில் பார்த்தபோது, லாரி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து பர்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வந்தனர். இதில், கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியைச் சேர்ந்த வாசு மகன்கள் பாலசுப்பிரமணி (25), கோகுல்ராஜ் (21), பர்கூர் அருகே உள்ள வலசகவுண்டனூர் செ.கதிர்வேல் (19) ஆகியோர் லாரியைத் திருடியது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரித்ததில் சப்பாணிப்பட்டி அருகே லாரியை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. லாரியை மீட்ட போலீஸார், மூவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கோகுல்ராஜ், கதிர்வேல் ஆகிய இருவரும், திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு தனியார் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேளாண்மை கல்லூரியில் மாணவா் மன்றம் தொடக்க விழா

திருவாரூா் மாவட்டத்தில் 1,271 வாக்குச்சாவடிகள்

திருவண்ணாமலையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: தமிழக டிஜிபி 5 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

