பர்கூர் அருகே லாரி திருட்டு வழக்கில், தனியார் பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உள்பட மூவரை போலீஸார், ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள ஜெகதேவியைச் சேர்ந்தவர் சி.குமார் (39). லாரி உரிமையாளர். இவர், கடந்த 15-ஆம் தேதி தனது வீட்டின் அருகே லாரியை நிறுத்தியுள்ளார். மறுநாள் காலையில் பார்த்தபோது, லாரி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து பர்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வந்தனர். இதில், கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியைச் சேர்ந்த வாசு மகன்கள் பாலசுப்பிரமணி (25), கோகுல்ராஜ் (21), பர்கூர் அருகே உள்ள வலசகவுண்டனூர் செ.கதிர்வேல் (19) ஆகியோர் லாரியைத் திருடியது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரித்ததில் சப்பாணிப்பட்டி அருகே லாரியை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. லாரியை மீட்ட போலீஸார், மூவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கோகுல்ராஜ், கதிர்வேல் ஆகிய இருவரும், திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு தனியார் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாதப் பலன்கள் - மீனம்

நடிகர் அஜித்துக்கு இபிஎஸ், அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து

மே மாதப் பலன்கள் - கும்பம்

மே மாதப் பலன்கள் - மகரம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

