மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

முதல்வர் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு

தமிழக முதல்வருக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்துள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2018, 5:54 am


புது தில்லி: தமிழக முதல்வருக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்துள்ளது.

நெடுஞ்சாலைத் துறைப் பணிகளுக்கான டெண்டர்களை ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக திமுக சார்பில் வழக்குத் தொடர்ந்தது.

தமிழக முதல்வர் மீதான புகார் என்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.