தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புதுதில்லியில் தமிழக மாணவி மரணம்

புதுதில்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படிக்கும் தமிழக மாணவி ஸ்ரீமதி ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:10 pm

DIN

புதுதில்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படிக்கும் தமிழக மாணவி ஸ்ரீமதி ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி (21). இவர் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் தில்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி அகாதெமியில் சேர்ந்து படித்து வந்தார்.

இந்நிலையில், தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் கதவுகள் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸார், அறையில் சென்று பார்த்தபோது மாணவி ஸ்ரீமதி மரணமடைந்தது தெரியவந்தது. மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.