தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதவி உயர்வு பெற்ற 47 பொறியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கான உத்தரவை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் திங்கள்கிழமை வழங்கினார்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டலம், மாவட்ட அளவிலான அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசுகையில் தற்போதைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்' என்றார்.
47 பேருக்கு பதவி உயர்வு: இதில், பதவி உயர்வு பெற்ற 47 பொறியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கான உத்தரவையும், ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான ஆணையையும் அவர் வழங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் வனம், சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் து.சேகர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு

12 ராசிக்காரர்களுக்குமான வார பலன்கள்!

சினிமாவில்தான் ஒரே பாட்டில் முதல்வர் ஆகலாம்.. பிரகாஷ் ராஜ் பிரசாரம்

5 போட்டிகளாக விக்கெட் எடுக்காத பும்ரா..! பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டுமா?
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

