சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் படித்து தேர்ச்சி பெற்று, கடந்த 27 ஆண்டுகளாக (1991-2017) சான்றிதழ் பெறாத மாணவர்களுக்கு நிலுவைச் சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம் வரும் 28 -ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை அண்ணாமலை நகரில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.முருகேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம், கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 2017 -ஆம் ஆண்டு வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள மதிப்பெண் பட்டியல், பட்டச் சான்றிதழ் உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக, நிலுவைச் சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம் தேர்வுத் துறை சார்பில் நடைபெற உள்ளது. வருகிற 28 -ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இதில், மாணவர்கள் தங்களது சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
சான்றிதழைப் பெற வரும் மாணவர்கள் தங்களின் ஏதேனும் ஓர் புகைப்பட அடையாள அட்டையுடன் நேரில் வந்து பல்கலைக்கழகத்தில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தி, அனைத்து வகையான சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், இதுதொடர்பான கூடுதல் தகவலுக்கு பல்கலைக்கழகத் தேர்வுத் துறை, தொலைதூரக் கல்வி இயக்ககம் அல்லது பல்கலைக்கழக கல்வி மையங்களைத் தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆவணி சிறப்புப் பூஜை

பரமக்குடியில் சேதமடைந்த அணுகு சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கொலை வழக்கில் இளைஞா் கைது; மற்றொருவா் நீதிமன்றத்தில் சரண்

குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் விருது வழங்கும் விழா
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


