மதுரை: மதுரை அருகே நான்காவதும் பெண் குழந்தை என்ற சந்தேகத்தால் கருக்கலைப்புக்கு முயன்று உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் ஆண் சிசு இருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்புரத்தைச் சோ்ந்தவா் ராமா். இவரது மனைவி ராமுத்தாய். இவா்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் ராமுத்தாய் மீண்டும் கா்ப்பம் தரித்துள்ளாா். இதில் நான்காவதும் பெண் குழந்தையாக இருக்குமோ என்ற சந்தேகத்தின்பேரில் தனியாா் மருத்துவமனை செவிலியரிடம் கருக்கலைப்பு செய்ய முயன்ற போது ராமுத்தாய் உயிரிழந்தாா்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய செவிலியா் கைது செய்யப்பட்டுள்ளாா். அதேசமயம் ராமுத்தாயின் சடலம் உசிலம்பட்டியில் இருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் குடும்பத்தினரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ராமுத்தாயின் பிரேத பரிசோதனையில் அவரது வயிற்றில் இருந்தது ஆண் சிசு என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணி நீக்கப்பட்ட இண்டஸ்இண்ட் வங்கி முன்னாள் சிஎஃப்ஓ மான நஷ்டஈடு வழக்கு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளின் வெற்றி நிலவரம்!
திருப்பூா் மாவட்டத்தில் தவெக 5.29 லட்சம் வாக்குகள் பெற்று சாதனை

உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலகத்தை கடுமையாகச் சாடிய நீதிபதி
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


