

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்து, அவர்களது நாட்டு படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச்சென்ற சம்பவம் மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் நாட்டுப்படகு மூலம் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களது பயன்படுத்திய நாட்டு படகையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்கள் அனைவரும் காரைநகர் துறைமுக கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Sri Lankan Navy apprehended 4 Indian fishermen and seized a boat, earlier this morning. They have been taken to Kankesanthurai Naval camp.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.