கோவையில் வைரம், ரொக்கம் என ரூ.5 கோடிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன்!

கோவையில் வைரம், ரொக்கப்பணம் என மொத்தம் ரூ.5 கோடிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் பலர் தரிசித்து வருகின்றனர். 
கோவையில் வைரம், ரொக்கம் என ரூ.5 கோடிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன்!
Published on
Updated on
1 min read

கோவையில் வைரம், ரொக்கப்பணம் என மொத்தம் ரூ.5 கோடிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் பலர் தரிசித்து வருகின்றனர்.

விகாரி வருட தமிழ் புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோவையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு ரூ.2 ஆயிரம், ரூ.500 மற்றும் ரூ.200 உள்ளிட்ட ரொக்கப் பணம் மற்றும் வைரம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற ஆபரணங்கள் என மொத்தம் ரூ.5 கோடி மதிப்பில் அலங்காரம் செய்யப்பட்டிருந்து. 

மழை மற்றும் விவசாயத்துக்கு அருள் பாலிக்க வேண்டி முத்துமாரியம்மனை தரிசிக்க பல ஆயிரம் பக்தர்கள் திரண்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com