அரசு தொழிலாளர் காப்பீட்டு கழக மருத்துவமனை தொடங்கப்பட்டு 68 ஆண்டுகள் ஆகின்றன. தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் மருத்துவ வசதிகள் செய்து தருவதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள். ஆனால் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்வதை ஒரு முக்கிய வேலையாக கருதி செயல்பட்டு வருகிற அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவத்துறை விதிவிலக்கல்ல. அரசு டாக்டர்கள் பணிமாறுதலுக்கு கலந்தாய்வு நடத்துவதில் ஊழல், அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வர்களுக்கு நியமனம் வழங்குவதில் ஊழல், எம்.ஜி.ஆர் பல்கலைகழக துணைவேந்தர் பதவி வழங்குவதில் ஊழல் என அனைத்து நிலைகளிலும் ஊழல் தலைவிரித்தாடி வருகிறது.