மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல்: இந்திய கம்யூ கண்டனம் 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பது, நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

News image
Updated On :5 ஆகஸ்ட் 2019, 10:26 am

DIN

சென்னை: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பது, நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையி கூறியிருப்பதாவது:

அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு-370-ன் மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மோடியின் பாஜக மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இத்துடன் ஜம்மு -  காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஒன்றியப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்களின் நன்மதிப்பை பெற்ற அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  அமர்நாத் யாத்திரையை பாதியில் முடித்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, அவைகள் ராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளது.

நாட்டின் ஒற்றுமை கருதி அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு-370-ன் மூலம் ஆங்கில ஆட்சியின் பிளவுச் சதி முறியடிக்கப்பட்டு, இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் பதட்டம் நிலவி வரும் சூழ்நிலையில், அரசியல் தீர்வுக்காண வழிமுறைகள் உருவாக்கப்படாமல், அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை பிரித்திருப்பது நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு குற்றம் சாட்டுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.