கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்: பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு 

திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்  என்று கருணாநிதி நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் கட்சித்தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2019, 3:46 pm

DIN

சென்னை: திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்  என்று கருணாநிதி நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் கட்சித்தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில்,  கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். 

அதையடுத்து ராயப்பேட்டையில் நடைபெற்ற கருணாநிதி நினைவுதின பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் கலைஞர் போன்ற தலைவர் எவரும் இல்லை. திராவிட முன்னேற்ற கழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக வளர்த்துக் கொடுத்தவர் கலைஞர்.

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டின் பல ஊர்களில் கலைஞர் சிலை திறக்கப்படும்.

இந்திய அரசியல் சக்கரத்தை அப்போது சுழல வைத்தவர் கருணாநிதி.

முன்னெப்போதையும் விட கருணாநிதி இப்போது நமக்கு இன்னும் அதிகம் தேவைப்படுகிறார்.

கருணாநிதி என்றால் சமூக நீதியும், மாநில சுயாட்சியும் என்று பொருள். அவர்தான் மாநில சுயாட்சிக்காக ஆய்வு செய்ய ராஜமன்னார் ஆணையத்தை அமைத்தவர். தனது ஆட்சி கலைக்கப்பட்டபோது கூட கருணாநிதி தளராமல் தான் கொண்ட கொள்கைக்காக செயல்பட்டார்.

ஆனால் கருணாநிதி கண்ட சமூக நீதிக்கு உலை வைக்கும் விதமாக 10 சதவீத இட ஒதுக்கீடு தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது மாநில சுயாட்சி பறிக்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் தேர்வு செய்யப்பட்ட திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கருணாநிதி என்ன நினைப்பாரோ அதைதான் திமுக எம்.பி.க்கள் செய்து வருகின்றனர்.

தேசபக்தி பாடத்தை திமுகவுக்கு யாரும் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.