அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலாஉளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்
/

முரசொலி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு 

சென்னையில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதனன்று திறந்து வைத்தார்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2019, 5:31 pm IST

சென்னை: சென்னையில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதனன்று திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி,  முரசொலி நாளிதழ் அலுவலகத்தில் அவரது உருவச்சிலையினை திறந்து வைக்கும் நிகழ்ச்சி புதன் மாலை நடைபெற்றது.  

இந்த விழாவிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார். புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து, திமுக நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். 

வரவேற்புரையைத் தொடர்ந்து  கருணாநிதியின் சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.

அவர் திறந்து வைத்த சிலையானது அமர்ந்த நிலையில் கருணாநிதி எழுதுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வு முடிந்த பின்னர் சென்னை மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர் இந்த தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டமானது ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் இரவு நடைபெற உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.