47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆம்பூர் அருகே 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது

ஆம்பூர் அருகே சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பொதுமக்கள் உதவியுடன் மின்விளக்கு இல்லாத இடத்தில் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் வியாழக்கிழமை இரவு பிடித்தனர்.

News image
Updated On :20 டிசம்பர் 2019, 4:55 am

DIN

ஆம்பூர் அருகே சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மின்விளக்கு இல்லாத இடத்தில் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் வியாழக்கிழமை இரவு பிடித்தனர்.

Story image


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பார்சனா பள்ளி பகுதியில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 7 அடி நீள மலைப்பாம்பு உள்ளதாக ஆம்பூர் வனத்துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெருமாள் ஆகியோர் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் பாம்பை பிடித்தனர். அங்கு மின்விளக்கு இல்லாத போதிலும், டார்ச் லைட்டை பயன்படுத்தி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.