வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்.. புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்

News image
Updated On :8 ஜனவரி 2019, 4:16 am

DIN

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, திருப்புனவாசலைச் சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றனர். படகு சேதமடைந்த நிலையில் நடுக்கடலில் தவித்த அவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டுசென்றனர்.

இந்நிலையில், கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து காரைநகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அவர்களை வரும் 10 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் 8 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது புதுக்கோட்டை பகுதி மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.