தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..!

வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கைக்கு தென் கிழக்கே, காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகம்,
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..!


சென்னை: வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கைக்கு தென் கிழக்கே, காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், இதையடுத்து தமிழகம், புதுச்சேரிக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:  

வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கைக்கு தென் கிழக்கே, காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால், வளிமண்டலத்தை கடக்கும் மேக கூட்டங்களால், வரும் 25 ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்து வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com