அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 1958 ஆம் ஆண்டு பிரிவு முன்னாள் மாணவர்கள் ரூ. 10 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் நூலகத்தை உருவாக்கித் தந்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் 1958 ஆம் ஆண்டு பிரிவு மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 1958 ஆம் ஆண்டு 125 மாணவர்கள் பொறியியல் படிப்பை மேற்கொண்டனர். இவர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பணியாற்றி ஓய்வுபெற்றனர். இவர்களில், 50 பேர் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இவர்கள் 50 பேரும் சேர்ந்து ரூ. 10 லட்சம் செலவில் டிஜிட்டல் நூலகம் ஒன்றை பல்கலைக்கழக வளாகத்தில் உருவாக்கித் தந்துள்ளனர். 20 கையடக்க கணினிகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் குளிரூட்டி வசதியுடன் கூடிய இந்த டிஜிட்டல் நூலகத்தை பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா திறந்துவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நாவறட்சி தணிய...!

பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!
... புள்ளிகள்...

குடத்திற்குள் சிக்கிக்கொண்ட நாய்! போராடி மீட்ட உரிமையாளர்! | Thanjavur
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


