மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழுவை நியமித்து முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு:
மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைக்கப்படுகிறது.
கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைப்புச் செயலாளர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகிய 5 பேர் குழுவில் இடம்பெறுவர் என்று கூறியுள்ளனர். அதைப்போல மக்களவைத் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவையும் முதல்வரும், துணைமுதல்வரும் அறிவித்துள்ளனர்.
அதன் விவரம்: அமைப்புச் செயலாளர்கள் சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், செ.செம்மலை, பி.எச்.மனோஜ்பாண்டியன், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ரவி பெர்னார்ட் ஆகிய 7 பேர் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பர் எனவும் அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நாவறட்சி தணிய...!

பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!
... புள்ளிகள்...

குடத்திற்குள் சிக்கிக்கொண்ட நாய்! போராடி மீட்ட உரிமையாளர்! | Thanjavur
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


