ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

தனியார் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் தேசியக் கல்விக் கொள்கை சொல்வது என்ன?

தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு பற்றி சமூக செயற்பாட்டாளரும், குழந்தைகளுக்கான எழுத்தாளருமான உமாநாத் விழியனின் எளிமையான விளக்கங்கள்.

News image
Updated On :2 ஜூலை 2019, 11:00 am IST

தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு பற்றி சமூக செயற்பாட்டாளரும், குழந்தைகளுக்கான எழுத்தாளருமான உமாநாத் விழியனின் எளிமையான விளக்கங்கள்.

தேசியக் கல்விக் கொள்கை வரைவை நாம் ஏன் புரிந்து கொள்ள வேண்டும் என்பது முதல் அதில் எத்தனை ஓட்டைகள் இருக்கிறது என்பது வரை சிறு சிறு கேள்வி பதில் வடிவில் பதிவிட்டு வருகிறார்.

அதில் இருந்து சில..
கேள்வி : தேசிய கல்விக் கொள்கையில் தனியார் பள்ளிகளை ரெகுலேட் செய்ய ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றது தானே?

பதில் : அவை ரெகுலேட் செய்வது போல தோன்றினாலும் அப்படி இல்லை. எப்போது ஒரு விஷயத்தினை கண்காணிக்க முடியும் இதெல்லாம் அவசியமாக இருக்கவேண்டும் அவை இல்லை என்றால் நடவடிக்கை எடுப்பதே கண்காணிப்பு. எதுவுமே கட்டாயம் என்று இல்லை, அவரவர் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். நகரங்களில் பெரிய அறைகள் தேவையில்லை, மைதானங்கள் தேவையில்லை, குறுகிய மாடிப்படிகள் இருக்கலாம்.

இனியன் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

”பள்ளிகள் குழந்தைகள் மீது செலுத்தும் மிகப்பெரிய வன்முறை மைதானங்கள் இல்லாமல் பள்ளிகளை கட்டமைத்தல்"

ஆமாம், இது வன்முறையை எளிதாக பள்ளிக்குள் நுழைய வகுத்துவிடும். சில ஆண்டுகள் முன்னர் கும்பகோணம் தீ விபத்தும் உங்கள் நினைவிற்கு வரலாம். அடுத்த வரியே அவர்கள் பாதுகாப்பிற்கும், கற்றலுக்கு இனிமையான சூழலும் இருப்பதில் எவ்வித சமரசமும் இல்லை என்கின்றார்கள்.

- விழியன்

தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் கிடுக்கிப்பிடியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விழியன் விளக்கியிருப்பதாவது,

உயர்கல்வி நிறுவனங்களில் இனி ஆசிரியர்கள் / ஊழியர்கள் சேர்க்கை மிகவும் கடுமையாக இருக்கும். அவர்கள் நிரந்தர ஆசிரியர் / ஊழியராக மாறுவதற்கு குறைந்தது ஐந்து வருடங்களாகும். அதுவும் நிர்வாகம், சக ஊழியர்கள், மாணவர்களின் கருத்தினை கேட்டுவிட்டே இதனை நிர்வாகம் மேற்கொள்ளும். இது அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இது தொடர்பாக மற்றொரு கேள்வி பதில் விளக்கம்.. பிரத்யேகமாக

கேள்வி: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏதேனும் தேர்வு இருக்கின்றதா?

பதில் : தனியார் ஆசிரியர்கள் அனைவரும் இனி மாநில அல்லது தேசிய அளவிலான TET தேர்வுகளையும் NTA நடத்தும் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அது அடுத்த ஆண்டு முதலே அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்கள் இந்த தேர்வினை எடுக்க வேண்டுமா இல்லையா என்ற குறிப்பு இதில் இல்லை.

எழுத்து தேர்வு இல்லாமல் வகுப்பறையில் எப்படி பாடம் எடுக்கின்றார்கள் என்ற தேர்வு நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.