விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

யாருடன் தேர்தல் கூட்டணி?: 5-ம் தேதி தேமுதிக அவசர ஆலோசனைக் கூட்டம் 

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது? என்பது குறித்து வரும்  5-ம் தேதி அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது. 

News image
Updated On :3 மார்ச் 2019, 9:26 am

சென்னை: வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது? என்பது குறித்து வரும்  5-ம் தேதி அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி  பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேமுதிகவைப் பொறுத்தவரை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தொடர்ந்து பேசி வந்தது. ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக, தேமுதிகவைக் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை திமுக கைவிட்டது.அதிமுக தரப்போடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த தருணத்தில் ஞாயிறன்று சமக தலைவர் சரத்குமார் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது சாலிகிராமம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது அரசியல் தொடர்பான தனது கருத்துகளை விஜயகாந்திடம் கூறியதாகவும் சரத்குமார் கூறினார்.

இந்நிலையில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது? என்பது குறித்து வரும்  5-ம் தேதி அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தேமுதிக நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் வரும் 5-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், தேமுதிக அணி செயலாளர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.