முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக் குழுவினர் நாளை காலை பேச்சுவார்த்தை 

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவு செய்வதற்காக, திமுக மற்றும் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக் குழுவினர் நாளை காலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

News image
Updated On :8 மார்ச் 2019, 4:02 pm IST

சென்னை: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவு செய்வதற்காக, திமுக மற்றும் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக் குழுவினர் நாளை காலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு பத்து தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் இரு கட்சிகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ளது 

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவு செய்வதற்காக, திமுக மற்றும் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக் குழுவினர் நாளை காலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. 

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தொகுதிகளை அடையாளம் கண்டு தேர்தல் பணிகளை துரிதப்படுத்த இரு கட்சிகளும் ஆர்வமாக உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.