நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடல்காற்று வழக்கத்தைவிட வேகமாக வீசுவதுடன், கடல் சீற்றமாகக் காணப்பட்டதால், மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை.
வேதாரண்யம் பகுதியில் தெற்கு திசையில் இருந்து வீசிவரும் கடல்காற்று ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து அதிகரித்து காணப்படுகிறது. வேகமாக வீசும் காற்றில் மணல்துகள்களும் பறந்து வருவதால் மக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், வேதாரண்யம், கோடியக்கரை கடல் பரப்பு சீற்றமாக உள்ளதால், வேதாரண்யம், புஷ்பவனம், வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், ஆறுகட்டுத்துறை, கோடியக்கரை பகுதியில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









