பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மோடி பதவியேற்பு விழாவுக்கு திமுகவிற்கு அழைப்பெல்லாம் இல்லை: டி.ஆர்.பாலு பளீர் 

பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க திமுகவிற்கு அழைப்பு ஏதும் வரவில்லை என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 மே 2019, 7:30 pm IST

சென்னை: பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க திமுகவிற்கு அழைப்பு ஏதும் வரவில்லை என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதையடுத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும்  விழா வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. தில்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க எட்டு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்திய அளவில் பல்வேறு முக்கியமான தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க திமுகவிற்கு அழைப்பு ஏதும் வரவில்லை என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று சென்னை விமான நிலையத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு திமுகவிற்கு அழைப்பு வந்ததாக கூறப்படும் செய்தி உறுதிப்படுத்தப்படாத ஒன்று. அந்த நிகழ்வில் பங்கேற்க திமுகவிற்கு எந்தவொரு அழைப்பும் வரவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதேசமயம், 'அழைப்பு வந்தால் செல்வீர்களா?' என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது குறித்து தலைமை தான் முடிவு எடுக்கும் என்று அவர் பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.