கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பாகிஸ்தானின் ஐஎஸ் அமைப்பிடம் இருந்து பணம் பெறும் பாஜக: காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை 

பாகிஸ்தானின் ஐஎஸ் அமைப்பிடம் இருந்து பாஜக பணம் பெறுகிறது என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

News image
Updated On :1 செப்டம்பர் 2019, 12:16 pm

DIN

புது தில்லி: பாகிஸ்தானின் ஐஎஸ் அமைப்பிடம் இருந்து பாஜக பணம் பெறுகிறது என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

மத்தியப் பிரதேசம் சட்னா மாவட்டத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு நிதி திரட்டியதாக கடந்த புதன்கிழமையன்று ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் பஜ்ரங் தளம் அமைப்பின் தலைவர் பல்ராம் சிங். பஜ்ரங் தளம் அமைப்பின் தலைவர் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்குநிதி திரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளது மத்தியப் பிரதேசத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பாரதிய ஜனதா கட்சியின் 'யுவ மோர்சா' அமைப்பின் தலைவர் துருவ் சக்சேனாவும் இதுபோன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், " பஜ்ரங் தளம், பாஜக ஆகிய கட்சிகள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பிடம் இருந்து பணம் பெறுகின்றன. இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் முஸ்லிம்களை விட முஸ்லிம்கள் அல்லாதவர்கள்தான் ஐஎஸ்ஐக்கு உளவு சொல்கிறார்கள் என்பது தெரிகிறது" என்று தெரிவித்தார்.

திக்விஜய் சிங்கின் இந்தக் கருத்துக்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாஜக தேசியத் துணைத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான், " செய்தியில் இடம் பெறவேண்டும் என்ற பரபரப்பிற்காகவே திக்விஜய் சிங் இப்படிப் பேசுகிறார். திக்விஜய் சிங்கும், அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் களும்தான் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்' என்று அவர் பதிலுக்கு குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.