47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கூட்டணி இன்றி காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடியாதா? கேஎஸ்.அழகிரி

கூட்டணி இன்றி காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடியாதா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேஎஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :6 செப்டம்பர் 2019, 9:31 am

DIN

கூட்டணி இன்றி காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடியாதா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேஎஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதையொட்டி நாங்குநேரியில் காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் கேஎஸ் அழகிரி, குறைந்தபட்சம் தெருவில் நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடியுமா என ஆராய வேண்டும். வாக்குச்சாவடியை கைப்பற்ற முடியாவிட்டாலும் பாதுகாக்கும் ஆற்றல் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறதா?. மற்ற கட்சிகளைப் போல காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடு இல்லாத இயக்கமாக இருக்கிறது. 

காங்கிரஸின் மேடையை கூட சரிசெய்ய முடியாத நிலையில்தான் கட்சி இருக்கிறது. கூட்டணி இன்றி காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடியாதா? 50 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? கூட்டணி இன்றி வெற்றிபெற முடியாதா என்பதற்காகத்தான் இந்த கூட்டமே. தென் தமிழகம் என்பது காங்கிரஸ் கட்சியின் வேர், உயிர்நாடி என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.