ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 45,000 கன அடியாக அதிகரிப்பு 

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 45,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை

Published On :31 ஜனவரி 2024, 3:32 pm IST

சென்னை: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 45,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வெள்ளிக்கிழமையில் இருந்து தமிழகத்துக்கு காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக வெள்ளி மாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 65,000லிருந்து 72,000 கனஅடியாக அதிகரித்துக் காணப்பட்டது.

இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 80,000 கனஅடியாக அதிகரித்துக் காணப்பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமை காலை மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்த அணை கட்டிமுடிக்கப்பட்டு 86 ஆண்டுகள் ஆன நிலையில்,  43வது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 76,000 கன அடியாகவும், அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறப்பு வினாடிக்கு 32 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 45,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையில் நீர் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்திற்கு நாளை நீர் திறக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.