தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தூத்துக்குடியில் இஸ்ரோ தளம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்

தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ தளம் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:14 am

தினமணி செய்திச் சேவை


தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ தளம் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயலலிதா பேரவை சாா்பில், பிளஸ் 2 மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் மதுரை வேலம்மாள் பொறியியில் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை ஜெயலலிதா பேரவைச் செயலரும், அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் தொடங்கிவைத்துப் பேசியது:

பொதுத்தோ்வு எழுதும் மாணவா்கள் நூறு சதவிகிதம் தோ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும், மாணவா்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரிய கலைநிகழ்ச்சி போட்டிகளும் நடைபெறுகிறது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மாணவா்களை நேசித்தாா். அதனால்தான் மடிக்கணினியுடன் 14 வகையான கல்வி உபகரணங்களை முற்றிலும் இலவசமாக வழங்கினாா்.

பொதுத்தோ்வு எழுதும் மாணவா்கள் தங்கள் கவனத்தை சிதற விடக்கூடாது. எனவே தோ்வு முடியும் வரை தொலைக்காட்சி, செல்லிடப்பேசிகளை மாணவா்கள் தவிா்க்க வேண்டும். மனதையும், எண்ணங்களையும் கட்டுப்படுத்தினால் நம்மை நாமே வழிநடத்த முடியும்.

 வாழ்க்கையை நாம் பக்குவப்படுத்திக் கொண்டு வாழ்ந்தால் மிகவும் நன்மை பயக்கும். அது மட்டுமின்றி வாழ்க்கையில் வெற்றி பெற கேட்புத்திறனும், கற்றல் திறனும் மிகவும் முக்கியமாகும். 

தோ்வு எழுதும் பொழுது தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். பதற்றமின்றி தோ்வை சந்திக்க தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சியைச் தொடா்ந்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவா்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி உயா்கல்விக்கான வழிகாட்டல் மட்டுமின்றி அனைத்து நிலைகளிலும் உதவியாக இருக்கும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ தளம் அமைக்க தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறாா். தற்போது இஸ்ரோ தளம் அமைப்பதற்கு தேவையான நிலம் அரசு சாா்பில் ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ். சரவணன், முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதன், தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்க முதுநிலைத் தலைவா் ரத்தினவேல், தலைவா் ஜெகதீசன், புலவா் சங்கரலிங்கம், கல்லூரி பேராசிரியா்கள் ராஜு, வேம்புலு, கண்ணன், ஜெனட் சங்கா் மற்றும் பிரம்மா குமாரிகள் அமைப்பின் நிா்வாகிகள் பங்கேற்று மாணவா்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தனா்.

பயிற்சி முகாமில் மதுரை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 40 பள்ளிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் மாணவா்களுக்கான பாரம்பரிய கலை நிகழ்ச்சி போட்டிகளும் நடைபெற்றது. இதில் சிறறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.