அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இன்று காலை மழையை நீங்கள் நேருக்கு நேர் சந்தித்தீர்கள் என்றால்.. அதற்குக் காரணம் இதுதான்!

இன்று காலை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென ஒரு சின்ன சாரல் மழை பெய்து சாலைகளில் சென்று கொண்டிருந்த ஒன்றும் தெரியாத அப்பாவிகளை நனைத்தது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:14 am

DIN


இன்று காலை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென ஒரு சின்ன சாரல் மழை பெய்து சாலைகளில் சென்று கொண்டிருந்த ஒன்றும் தெரியாத அப்பாவிகளை நனைத்தது.

சரி மழைதான் பிடித்துவிட்டது என்று மறைவிடங்களைத் தேடி ஓடி ஒளிந்தவர்களை எல்லாம் ஏமாற்றிவிட்டு, எட்டிப் பிடிப்பதற்குள் காணாமல் போகும் நீர்க்குமிழ் போல மறைந்துவிட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் இது பற்றி ஒரு பதிவை தனது பேஸ்புக்கில் இட்டுள்ளார்.

அதில், இன்று காலை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் திடீரென ஒரு மழை பெய்தது. ஒரு வேளை மீண்டும் அதுபோன்றதொரு மழையை நீங்கள் இன்று சந்தித்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.

கடற்கரைப் பகுதியில் இருந்து கருத்த மேகங்கள் தரைப் பகுதியை நோக்கி வருவதெல்லாம் பருவ மழையின் விருந்துதான். கிட்டத்தட்ட இது வடகிழக்குப் பருவ மழையின் ஒரு சேம்பிள்தான். அதாவது கிழக்குப் பகுதியில் இருந்து மேகக் கூட்டங்கள் வரத் தொடங்கியுள்ளன. இதனாலும், வளிமண்டலத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சிறப்பானதொரு மழை பதிவாகியுள்ளது.

இந்த மழை விருந்தில் நீலகிரியும், டெல்டா பகுதிகளும் கூட பங்கேற்றுக் கொண்டன. 

அதே சமயம், தென்மேற்குப் பருவ மழை இன்னும் நிறைவடையவில்லை. வழக்கமாக இது செப்டம்பர் மாதம் 30ம் தேதி நிறைவடைவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளில் நாம் சந்தித்த சிறப்பானதொரு தென்மேற்குப் பருவ மழை இதுவாகும் என்றும் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.