சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி, தயாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட தி.மு.க. எம்.பி.க்களும் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.பி.க்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்.
தொகுதிக்கு சென்று மக்கள் பிரச்னைக்காக பாடுபட வேண்டும். தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மக்களை நேரடியாக சந்தித்தும் மனுக்களை பெற வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசித்துள்ளனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் 11 மணி வரை நடைபெற்றது.