மு.க.ஸ்டாலின், சந்திரசேகர ராவ் சந்திப்பு ரத்து

மு.க.ஸ்டாலின், சந்திரசேகர ராவ் சந்திப்பு ரத்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்னையில் மே 13-ஆம் தேதி சந்தித்துப் பேச...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்னையில் மே 13-ஆம் தேதி சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. அப்போது தேர்தல் முடிவுகளைப் பொருத்து, மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்து ஸ்டாலினுடன் சந்திரசேகரராவ் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயனை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர் ராவ் திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.

தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளார். எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு ரத்தானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மே 19-ஆம் தேதி நடைபெறவுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தின் பணிச் சுமையில் இருப்பதால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்று திமுக வட்டாரங்கள் செவ்வாய்கிழமை தெரிவித்தன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com