பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் முடிவு ஆளுநர் முன்பு இருப்பதால் எங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுப்பார் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி திருப்பூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஆளுநர் முடிவெடுக்கலாம் என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அமைச்சரவை தீர்மானத்தைதான் முடிவாக எடுக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆளுநர் எப்படி வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம். சட்டத்திற்குட்பட்டு எது நடந்தாலும் எங்களுக்கு சம்மதமே. நீதி இவ்வாறுதான் வழங்கப்பட வேண்டும் என சிறு குழுக்கள் முடிவெடுக்கக் கூடாது.
ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி! திமுக பேரவைக் குழு தலைவராகத் தேர்வு!

தமிழக முதல்வரானார் சி. ஜோசப் விஜய்!

தமிழக முதல்வர் விஜய்க்கு சிபிஐஎம் வாழ்த்து!

100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்! தமிழக அரசு
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

